நான்தான்..உன் சிசு
அம்மா..
இங்கு உன் கருவறைக்கு
நானாக வரவில்லை
சொர்க்கத்தின் தேவதைகள்
ஏந்தி வந்து என்னை விடுத்து சென்றனர்
உன் கோவிலில்
ஆண்டவனின் சித்தம்
அதுவென்று..!
நானாக வரவில்லை!
அந்த தேவதைகள்
வேண்டியபடியே இருந்தன
உன்னுள் குடிகொண்ட நான்
பத்திரமாய் இருப்பதற்காக..
பத்ரிமாய் பிறப்பதற்காக..
நானும் மகிழ்ச்சியோடிருந்தேன்
முங்கியிருந்தேன் உன் கருவறை கடலில்
அவர்கள் யாழெடுத்து
தெய்வீக கணங்களை ஒத்திகை பார்த்தபடி
இருந்தார்கள்..
நான் பிறக்கும் நாளன்று இசைப்பதற்கென!
என்னை அவ்வப்போது வந்து
பார்த்தும் செல்வார்கள்
உன் கருவறையில் நான்
பள்ளி கொண்டிருக்கும் போது
அதனை நீ..அறிய மாட்டாய்
அம்மா..
உன் செல்லக் குழந்தையாய்
உலகினைத் தொட
நானும் காத்திருந்தேன் மகிழ்வோடு!
புன்னகை புரியவும்,
பாடவும், விளையாடவும்
நீ திருப்தியுறும் வரை
உன் பாலினை அருந்திடவும்
அதன் பின் உன் புன்னகையை கண்டிடவும்
கனாக் கண்டு கொண்டிருந்தேன்..
அம்மா!
கொடியதான நாளொன்றில்
என்னை கொல்ல
முடிவு செய்தாய்..
நரகத்தின் அரக்கர் கும்பல்
தாளமிட்டு நர்த்தனங்கள்
தலைகால் புரியாமல் ஆடி மகிழ
எம்பிக் குதித்து அவை சேர்ந்து பாட
மொத்த நரகமே விழாக்கோலம் பூண்டிட
என்னை கொல்லும் முடிவினை
நீ எடுத்தாய்!
எவ்வளவு நான் அரற்றினேன்
அழுது புரண்டேன்..
என்னோடு தேவதைகளும் கூட
அழுது தீர்த்தன..
சற்று முன்பாக
நீ என்னை கொன்ற போது
நான் கருவிலே கலைந்த போது
எல்லாம் வல்ல கடவுள் கூட
அழுது கொண்டிருக்கிறார்
செய்வதறியாமல்
உனக்கு தெரிகின்றதா..
..
அம்மா..?
You May Also Like:
- Ni Danka Ne, Mum, Poem By Abdul Basit Ismail Translation Of I Am Your Baby Mum
- The Song Of Solomon And The Mystics.
- Head Of The Medusa And Jesus On The Holy Cross
- Growing In The Consciousness Of The Absolute
- Into Theinner Sanctuary Beyond Analytical Reflection.
- To Live In More Intimate Communication With The Mystery
- Translation By The Poetess Houda Boukassoula Of I Am Your Baby Mum
- Είμαι Το Μωρό Σας Μητέρα – Ποίημα Του Δρ Αντώνη Θεοδώρου
Leave a Reply